ஞாயிறு, 30 நவம்பர், 2014

வெங்காயத்தின் 50 குணங்கள்!

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.
இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

கம்பு கூழ்


ஆரோக்கியத்தைத் தரும் கம்பு கூழ்
அக்காலத்தில் எல்லாம் காலை உணவாக

 தானியங்களைத் தான் அதிகம் உட்கொண்டு 

வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட 

நாட்கள் எவ்வித நோயும் தாக்காமல் 

ஆரோக்கியமாக இருந்தனர். எனவே நீங்களும் 

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், 

காலையில் தானியங்களை சேர்த்து வாருங்கள். 

அதிலும் தானியங்களில் ஒன்றான கம்புவை 

கூழ் செய்து குடித்து வருவது, உடலுக்கு மிகவும் 

குளிர்ச்சியானது, சத்தானது.


இங்கு அந்த கம்பு கூழ் எப்படி செய்வதென்று 

கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து 

சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 1 கப்

சாதம் ஊற வைத்த தண்ணீர் - தேவையான 

அளவு

சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

மோர் - 1 கப்

சாதம் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சாதம் ஊற வைத்த நீரில் கம்பு மாவை 

கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கரைத்து, 6-8 

மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்ரை அடுப்பில் வைத்து, 

அதில் கரைத்து வைத்துள்ள கம்பு நீர் மற்றும் 

தேவையான அளவு உப்பு சேர்த்து, 

அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே 

இருக்க வேண்டும்.

அப்படி கிளறும் போது கலவையானது களி 

போன்று வரும் போது, அதனை இறக்கி வேறு 

பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க 

வேண்டும்.

இறுதியில் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், 

மோர் மற்றம் சாதம் சேர்த்து நன்கு கரைத்தால், 

கம்பு கூழ் ரெடி!!!

குறிப்பு:

இதனை மண் பாத்திரத்தில் கரைத்து குடித்தால், 

இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

சனி, 29 நவம்பர், 2014

தாவர History

நமது உணவில் இன்று அதிகம் இடம் பிடிக்கும் "புளி',இந்தியாவிற்கு,குறிப்பாக தமிழகத்திற்கு கி.பி.14-ம் நூற்றாண்டில் வந்தடைந்தது.புளியின் இயல்பான வாழிடம் ஆப்பிரிக்கா
ஆலமரம் நமது தமிழகத்தைச் சார்ந்ததல்ல.வடநாட்டிலிருந்து அசோகர் காலத்திலோ, அதற்குச் சற்று முன்போ புத்த மதத்தோடு தமிழகத்தை அடைந்திருக்க வேண்டும். தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழகத்தை வந்தடைந்த அயல் தாவரமாக ஆலமரம் உள்ளது.
வடநாட்டில் இருந்து தமிழகத்தை வந்தடைந்த மற்றொரு தாவரம் "பவழ மல்லிகை'.பக்தி இயக்க காலமான கி.பி.7ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகம் வந்து சேர்ந்தது இது.
இன்று தமிழகத்தில் பணப்பயிராக வளர்க்கப்படும் தென்னை,பிலிப்பைன்ஸ்,பசிபிக் தீவுகளில் தோன்றி இலங்கை வழியாக கேரளாவையும், தமிழகத்தையும் வந்தடைந்திருக்க வேண்டும் என்ற கூற்றையும் பேராசிரியர் முன் வைக்கிறார்.
கி.பி.7-ம் நூற்றாண்டு வரை கோயில்களுக்கு தேங்காய் உடைத்தல் பற்றிய குறிப்புகளும்,கி.பி.10-ம் நூற்றாண்டு வரை தேங்காய் கடவுளுக்கு படைக்கப்பட்டதாக எந்த இலக்கிய குறிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இஞ்சியும், மஞ்சளும் கூட தமிழக தாவரமல்ல. வட இந்தியாவில் இருந்து சங்க காலத்தின் ஆரம்பத்திலோ அதற்கு முன்போ இஞ்சியும்,சீனாவில் இருந்து மஞ்சளும் தமிழகம் வந்திருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
செவ்வந்தி, கேழ்வரகு, ஆமணக்கு, இன்று நம்முடைய உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கடலைப் பருப்பு போன்றவைகளும் தமிழகத்திற்கு வந்த அயல் தாவரங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
16-ம் நூற்றாண்டில் பெரு நாட்டிலிருந்து ஸ்பெயின் வழியாக இந்தியாவை வந்தடைந்தது தான், இன்று நாம் சுவைத்து மகிழும் கொய்யாப்பழம். 16-17-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் களால் இந்தியாவில் நுழைந்த மற்றொரு முக்கிய பயிர்த் தாவரம் உருளைக்கிழங்கு ஆகும். வேர்க்கடலையும் மத்திய அமெரிக்கப் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு கி.பி.1825முதல் 1850-ம் ஆண்டுக்குள் வந்தடைந்தது.
இந்த வகையில் தக்காளியும் இந்தியாவில் நுழைந்த ஒரு பயிர்த் தாவரமாகும். காப்பியும், தேயிலையும் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்களால் நம் நாட்டில் நுழைந்தது நாமறிந்ததே.
பாதாம் பருப்பும், மரவள்ளிக் கிழங்கும், கிராம்பும் இந்தியாவில் நுழைக்கப்பட்ட தாவரங்கள் தான். கற்பூரம் சீனாவிற்கும், சப்பானின் ஒரு சில பகுதிகளுக்கும் இயல்பான தாவரமாகும். 20-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் கேரளா மற்றும் நீலகிரியின் ஒரு சில பகுதிகளிலும் இது நுழைக்கப்பட்டது.குங்குமப்பூ காஷ்மீரப் பகுதியில் இருந்து கி.பி.10-ம் நூற்றாண்டு வாக்கிலும்,வெங்காயம் பெர்சியா மற்றும் ஆப்கானிஸ் தானில் இருந்தும், பூண்டு சுங்காணி பாலைவனத்திலிருந்தும்,சேனைக்கிழங்கு சப்பானியப் பகுதியிலிருந்தும், முள்ளங்கி மற்றும் ஆரஞ்சு சீனாவிலிருந்தும், முட்டைக்கோஸ், காலிபிளவர், டர்னிப், காரட், சிக்கரி போன்றவை ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,பீட்ரூட் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்தும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு தென்அமெரிக்கா விலிருந்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் கடந்த மூன்று நூற்றாண்டு களுக்குள் தான் நுழைந்தன
அவரை (மொச்சை), உழுந்து (உளுந்து), எலுமிச்சை, நெல், கரும்பு, மா, பலா, மாதுளை, முருங்கை,வாழை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இயல்வகை தாவரங்களைப் பற்றிய குறிப்புகளை சங்கப் பாடல்களில் காணமுடிகிறது.
பண்டைய தமிழ்ச் சமுதாயத்திலும்,பண்பாட்டிலும் "சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல' என்ற கருத்து வேரூன்றி இருந்தது.கி.பி.15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, விஜய நகர மன்னர்களின் காலம் தொடங்கி,சத்திரங்களில் சோறு விற்கப்பட்டதற்கான ஆதாரங்களை கல்வெட்டுக்களின் வழியே அறிய முடிகிறது.
வரலாற்றுக்கு முந்தையை காலத்தில் தமிழகத்தில் மதங்கள் இல்லை.தாவரங்கள் பரிசுத்தமானவை,கடவுள் தன்மை பெற்றவை என்பது போன்ற தங்கள் கருத்துக்களை ஆரியர்கள் தமிழக ஆன்மீகக் கருத்துக்களில் கலந்தனர். இது "பெரு மரபு சார்ந்த வழிபாடாக' மாறியது.
கோயில்களில் காணப்படும் தாவரங்கள் மட்டுமல்லாது,தாவரங்கள் சூழ்ந்த காடுகளிலும் கோயில்கள் அமைக்கப்பட்டன.அது போல்,இந்தியா முழுவதும் ஏறத்தாழ 50,000-மும், தமிழகத்தில் மட்டும் 448 கோயில் காடுகளும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நெடு மூக்கன், மூக்கன் சம்பா, மூக்கன் நெல், ஆனைக் கொம்பு சம்பா, கார் நெல் என 150-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களுக்கான தொழில் நுட்பங்களை அறிந்து, பயன்படுத்தியதை சங்க நூல்களின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது.
இன்று உழைப்பின் கூலிக்கு ஈடாக "சம்பளம்' பெறப்படுகிறது. செய்த வேலைக்கு ஈடாகச் சம்பாநெல்லும்,அளத்தில் விளைந்த உப்பும் கொடுத்த வழக்கத்தினால் தான் "சம்பளம்' (சம்பா + அளம்) என்ற சொல் பிறந்தது. தமிழ் மொழியின் வளமையும், தமிழர்களின் கூர்ந்தாய்வு செய்யும் பண்பும் இதன் மூலம் நன்கு விளங்குகிறது.
பண்டைய காலத்தில்,தமிழர்கள் பனை மரங்களை விரும்பி வளர்த்தனர் என்பதை சங்க நூல் (புறநானூறு)மூலம் அறியும் போது,இன்று பணப்பயிர் மீதிருக்கும் மோகம் வருத்தத்தையே அளிக்கிறது.
தாவரங்களுக்கு ஊறுவிளைவிப்ப வர்களுக்கு அரசு தண்டனை கொடுத்த கல்வெட்டு குறிப்புகள், செய்திகள், தாவரப் பாதுகாப்பில் அரசர்கள் எவ்வளவு முனைப்போடு இருந்தனர் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.
தாவரங்களின் பாதுகாப்பிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நீருக்கும் தமிழர்கள் அளித்திருந்தனர்.கீழமை பாசனதாரர்களின் "முன்னுரிமை'என்ற உரிமை பற்றி அன்றே கூறியிருப்பது தமிழர்களின் தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது.
அதற்கு ஆதாரமாக, தொண்டை மண்டலத்து பகுதியில், விதியை மீறிய அரசு அதிகாரியின் செயலை, அரசருக்கு தெரியப்படுத்தி விட்டு, ஊர் மக்களே தடுத்து நிறுத்தினர். (கோமதி நாயகம், 2010) இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்னும் அளவிற்கு அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன.
இந்த பிரியாணியையும் "ஊன் சோறு'என்ற பெயரில் பண்டைய காலத்தில் தமிழர்கள் உணவாகக் கொண்டனர்.
இன்றைய தமிழ்நாட்டின் உணவில் முக்கிய இடம்பிடித்திருக்கும் இட்லி,15ம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் உணவு பழக்கத்தில் இல்லை. இந்தோனேசியா நாட்டிலிருந்து அவிக்கும் பாத்திரமும், அதை பயன்படுத்தும் முறையும், அம்மன்னர்களின் இந்திய வருகையின் போது, தமிழகத்தை அடைந்திருக்கலாம். புளித்த உணவையும், குழைத்த உணவையும் அன்றைய தமிழர்கள் விரும்பி உண்டனர். கள்ளும் தமிழர்கள் விரும்பிக் குடித்த பானம். புளித்த மோர், நாள்பட்ட தேன் போன்றவற்றையும் விரும்பி உண்டனர்.
.பண்டைய தமிழர்கள் இதிலும் பக்க விளைவு,பாதிப்புகளை ஏற்படுத்தாத நுட்பங்களின் மூலம் சாயத்தை பெற்றனர். தாவரங்களின் இலைகள், வேர், பூ, பட்டை போன்றவற்றின் சாறில் இருந்து வெளிப்படும் நிறங்களை முன்னுணர்ந்து அதற்கேற்றப்படி துணி,பட்டு,பாய்கள்,ஓவியங்களுக்கு நிறமேற்றியிருக்கிறார்கள்.
தாவரங்கள் மற்றும் மற்ற பொருட்களின் வணிகத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர். கனி, காய்கள், இலைகள் உள்ளிட்ட தாவரங்களின் பாகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியேயும், தரை மூலமாகவும் பண்டைய தமிழர்கள் வணிகம் செய்து வந்துள்ளனர்.
இதில் எந்த ஒரு கட்டத்திலும் மரங்களோ, காடுகளோ அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் மட்டும் 50%-க்கும் மேற்பட்ட இயற்கை வளங்களை நாம் தான் (இன்றைய தமிழர்கள்) அழித்துள்ளோம்.
தனது 25 ஆண்டு கால உழைப்பில் வரலாற்று ஆவணமாக, "தமிழரும் தாவரமும்' என்ற அறிவியல்பூர்வமான,மிகச் சிறந்த நூலை பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ளார்.
இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்நூல் ஒரு வழி காட்டியாக அமையும். தமிழ் இனம், மொழி, நிலம் காக்க போராடும் அறிஞர்களின் கையில் "தமிழரும் தாவரமும்' நூல் ஒரு அறிவாயுதமாக விளங்கும்.
நூலின் பெயர்
தமிழரும் தாவரமும்
ஆசிரியர்
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
விலை ரூ.200/-

111 பழ பெயர்கள் in ENGLISH

111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்
111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப் பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்க‌ப்பா..
‪#‎A‬
Ambarella ------ அம்பிரலங்காய்
Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot ------ சருக்கரை பாதாமி
Annona ------ சீத்தாப்பழம்
Annona muricata ------ முற்சீத்தாப்பழம்
Avocado ------ வெண்ணைப்பழம்
Banana ------ வாழைப்பழம்
Batoko Plum ------ 'லொவிப்'பழம்
Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு
Bilberry ------ அவுரிநெல்லி
Bitter Watermelon ------ கெச்சி
Blackberry ------ நாகப்பழம்
Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
Blueberry ------ அவுரிநெல்லி
Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
Butter fruit ------ ஆனைக்கொய்யா
Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம்
Cashew Fruit ------ முந்திரிப்பழம்
Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய்
Cherry ------ சேலா(ப்பழம்)
Cherimoya ------ சீத்தாப்பழம்
Chickoo ------ சீமையிலுப்பை
Citron ------ கடாரநாரத்தை
Citrus Aurantifolia ------ நாரத்தை
Citrus Aurantium ------ கிச்சலிப்பழம்
Citrus medica ------ கடரநாரத்தை
Citrus sinensis ------ சாத்துக்கொடி
Citrus reticulata ------ கமலாப்பழம்
Clementine ------ நாரந்தை
Cocoa fruit ------ கோக்கோ பழம்
Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம்
Cranberry ------ குருதிநெல்லி
Cucumus trigonus ------ கெச்சி
Cucumber ------ வெள்ளரிப்பழம்
Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்
Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம்
Date fruit ------ பேரீச்சம் பழம்
Devilfig ------ பேயத்தி
Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)
Duku ------ 'டுக்கு'
Durian ------ முள்நாரிப்பழம்,
Eugenia Rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம்
Emblica ------ நெல்லி
Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா
Fig ------ அத்திப்பழம்
G
Gooseberry ------ நெல்லிக்காய்
Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Guava ------ கொய்யாப்பழம்
Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி
Harfarowrie ------ அரைநெல்லி
Honeydew melon ------ தேன் முழாம்பழம்
Huckle berry ------ (ஒரு வித) நெல்லி
‪#‎I‬.......
Jack fruit ------ பலாப்பழம்
jambu fruit ------ நாவல்பழம்
Jamun fruit ------ நாகப்பழம்
Jumbu fruit ------ சம்புப் பழம்
‪#‎K‬
Kiwi fruit ------ பசலிப்பழம்
Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்
‪#‎L‬
Lychee ------ 'லைச்சி'
Lansium ------ அத்திப்பழம்
Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை
Lime ------ தேசிக்காய்
Loganberry ------ 'லோகன் பெறி'
Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம்
Louvi fruit ------ 'லொவிப்பழம்'
‪#‎M‬
Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை
Mango ------ மாம்பழம்
Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம்
Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
Mulberry ------ முசுக்கட்டைப் பழம்
Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி
Morus macroura ------ மசுக்குட்டிப்பழம்
‪#‎N‬..........
‪#‎O‬
Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
Orange (Loose Jacket) ------ கமலாப்பழம்
‪#‎P‬
Pair ------ பேரிக்காய்
Papaya ------ பப்பாளிப் பழம்
Passionfruit ------ கொடித்தோடைப்பழம்
Peach ------ குழிப்பேரி
Persimmon ------ சீமைப் பனிச்சை
Phyllanthus Distichus ------ அரைநெல்லி
Plum ------ 'ஆல்பக்கோடா'
Pomelo ------ பம்பரமாசு
Prune ------ உலர்த்தியப் பழம்
Palm fruit ------ பனம் பழம்
Passion fruit ------ கொடித்தோடை
Pear ------ பேரி
Pine apple ------ 'அன்னாசி'ப் பழம்
Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை
Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்'
‪#‎Quince‬ ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
‪#‎R‬
Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
Rasberry ------ புற்றுப்பழம்
Red banana ------ செவ்வாழைப்பழம்
Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
Rambutan ------ 'றம்புட்டான்'
‪#‎S‬
Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை
Star fruit ------ விளிம்பிப்பழம்
Satsuma ------ நாரத்தை
Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்
Strawberry ------ செம்புற்றுப்பழம்
Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்
‪#‎T‬
Tamarillo ------ குறுந்தக்காளி
Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
Tamarind ------ புளியம்பழம்
Tomato ------ தக்காளிப்பழம்
‪#‎U‬
Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)
‪#‎V‬.............
‪#‎W‬
Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
Wood Apple ------ விளாம்பழம்
Wax jambu ------ நீர்குமளிப்பழம்

இஞ்சி


இஞ்சி தரும் இனிமையான வாழ்வு:-
இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நகரத்தில் வாழும் மககள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர்.
எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம்.
* பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும்.
* கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற நேரங்களில் இஞ்சியால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், துவையல் போன்ற பொருட்கள் பசியினை தூண்டி, பசியின்மையைப் போக்குகிறது.
* கீமோதெரபி போன்ற சர்ஜரியின்போது உண்டாகும் குமட்டலை சரிசெய்கிறது.
* மூட்டுவலி, சதைப்பிடிப்புப் போன்ற வலிகளைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.
* கடுமையான போதையையும் முறிக்கும் சக்தி இஞ்சிக்கு இருப்பதாக அறிஞர்கள் பலரும் கண்டறிந்துள்ளனர்.
* இஞ்சிச் சாற்றை வாள சம்பந்தப்பட்டபேதிமாத்திரையுடன் அனுபானமாககச் சேர்த்துக் கொடுப்பர்.
* இது மருந்தின் குணத்தை அதிகப்படுத்துவதோடு குடல் இரைப்பை முதலிய உறுப்புகளிலுள்ள மாசை வெளியாக்கும்.
* ஒரு தோலா எடையுள்ள இஞ்சியை அரைத்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் ஒரு கோழிமுட்டையின் மஞ்சள் கருவைக்கூட்டிநன்றாக அடித்து, கரண்டியிலிட்டு சிறிது நெய் விட்டு, நீர் சுண்டி வெந்த பதத்தில் உட்கொள்ளலாம்.
* இப்படி சில தினங்கள் சாப்பிட தாது வலுக்கும்.
* தீனிப்பை, ஈரல் ஆகியவைகளுக்குப் பலத்தை கொடுக்கும்
* நினைவாற்றலை அதிகப்படுத்தும்.
* ஒரு இஞ்சித் துண்டை வாயிலிட்டு அடக்கி வைத்து கொண்டிருந்தால் தாகம் அடங்கும்...
* வேறு பலப் பிணிகளுக்கு இஞ்சியுடன் மற்றும் சில மருந்துப் பொருட்களைக்கூட்டி இஞ்சி லேகியம், இஞ்சித் தைலம் ஆகியவைகளைச் செய்து உபயோகித்துப் பயன் பெறுவர். எனவே, இஞ்சியை நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல நோய்களை நாம் எதிர்க்கலாம்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

30 வகை சமையல்

30 வகை பத்திய சமையல்
இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு
தேவையானவை: இளம் இஞ்சி 25 கிராம், பிஞ்சு பச்சை மிளகாய் 10, புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, அச்சு வெல்லம் ஒன்று, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி… புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
கறிவேப்பிலை மிளகு குழம்பு
தேவையானவை: கறிவேப்பிலை 2 கைப்பிடி அளவு, மிளகு 20, உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பு, பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
கீரை பொரித்த குழம்பு
தேவையானவை: முளைக்கீரை ஒரு சிறிய கட்டு, மிளகு 6, தனியா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, தேங்காய்த் துருவல் ஒரு சிறிய கிண்ணம், சீரகம் ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். பருப்பும் கீரையும் வெந்த பிறகு உப்பு சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இதை சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட்டால், சுவையில் அசத்தும். இதற்கு, மாங்காய்ப் பச்சடி சிறந்த காம்பினேஷன்.
தத்துவப் பச்சடி
தேவையானவை: வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு, மாங்காய்த் துண்டுகள் (சற்றே பெரியது) இரண்டு, வெல்லம் 50 கிராம், பச்சை மிளகாய் (சிறியது) ஒன்று, கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: மாங்காய்த் துண்டுகளை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேப்பம்பூவை சேர்த்து வறுக்கவும். வெந்த மாங்காய்த் துண்டுகளை இதில் கரைத்துவிடவும். பிறகு, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: ‘வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது’ என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தப் பச்சடி, தமிழ்ப் புத்தாண்டு அன்று முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.
கண்டதிப்பிலி ரசம்
தேவையானவை: கண்டதிப்பிலி (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 10 கிராம், மிளகு, தனியா, கடுகு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். இத னுடன் புளி, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து, நீர் விட்டு நன்கு கரைத்து கொதிக்கவைக்கவும். இதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து… கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: இந்த ரசம், உடல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பருப்புத் துவையல் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையானவை: உப்பில் ஊறவைத்து, காயவைத்த மணத்தக்காளி வற்றல் 25 கிராம், காய்ந்த மிளகாய் 2, புளி ஒரு எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி 4 டீஸ்பூன், வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, மணத்தக்காளி வற்றலை சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். இதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால்… அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத் தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.
பூண்டு மிளகு சீரக ரசம்
தேவையானவை: பூண்டு 6 பல் (தோல் உரித்தது), புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். புளியை நீரில் கரைத்து, அதில் அரைத்ததை சேர்த்துக் கலந்து உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் கடுகு, பெருங் காயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: காய்ச்சல் ஏற்படும் சமயத்தில் புழுங்கல் அரிசியை வறுத்து, ரவை போல உடைத்து குழைவாக வேகவைத்து, இந்த ரசத்தை ஊற்றிக் கரைத்து குடித்தால்… உடல் வலி, சோர்வு நீங்கும்.
இஞ்சி பிரண்டை துவையல்
தேவையானவை: இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி ஒரு சிறிய துண்டு, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பிரண்டையைப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக நல்லெண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
குறிப்பு: பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.
பூண்டு வடகம் குழம்பு
தேவையானவை: பூண்டு 100 கிராம், கூட்டு வடகம் 100 கிராம், சின்ன வெங்காயம் 20, வெந்தயம், கடுகு தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, சாம்பார் பொடி 4 டேபிள்ஸ்பூன், புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு, நல்லெண்ணெய் 50 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கூட்டு வடகம், கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு… வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி… இதனுடன் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.
குறிப்பு: இதயத்தைக் காக்கும் சிறந்த மருத்துவக் குணம் பூண்டுக்கு உண்டு. இதயக் கோளாறு உள்ளவர்கள், அடிக்கடி பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பூண்டுப்பொடி
தேவையானவை: உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், பூண்டு 100 கிராம் (தோல் உரிக்கவும்), காய்ந்த மிளகாய் 6, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பூண்டு ஆகியவற்றை எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும் (ரொம்ப மசியக்கூடாது).
குறிப்பு: இந்த பூண்டுப் பொடி இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் ஏற்றது. பூண்டு, இதயக் கோளாறு வராமல் தடுப்பதுடன், வாயுத் தொல்லையையும் நீக்கும்.
அப்பளக் குழம்பு
தேவையானவை: புளி பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன பூண்டு பல் 10, சின்ன வெங்காயம் 10, உளுந்து அப்பளம் 2, காய்ந்த மிளகாய் ஒன்று, சாம்பார் பொடி 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் தலா கால் ஸ்பூன், நல்லெண்ணெய் 6 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அப்பளத்தை பிய்த்து துண்டுகளாக்கி சேர்க்கவும். பின்னர் சாம்பார் பொடி போட்டு வதக்கி, புளித் தண்ணீரை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
வல்லாரைத் துவையல்
தேவையானவை: வல்லாரைக்கீரை ஒரு கட்டு, தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிள காய், உளுத்தம்பருப்பை சிறி தளவு எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் வல்லாரைக் கீரையை வதக்கிக்கொள்ளவும்.இவை ஆறியவுடன் தேங்காய்த் துரு வல், புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு: வல்லாரைக்கீரை, ஞாபகசக்திக்கு மிகவும் நல்லது.
மூலிகைப்பொடி
தேவையானவை: சுக்கு ஒரு சிறிய துண்டு, சுண்டைக்காய் வற்றல் 10, வேப்பம்பூ, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு 2 டீஸ்பூன், கடுகு 2 டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சிறிய துண்டு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடுகு, சுக்கு, சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயம் எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
செய்முறை: இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்தப் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடுகு சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும், சுக்கு ஜீரணசக்திக்கு நல்லது, வேப்பம்பூ பித்தத்தை தணிக்கும், கறிவேப்பிலை இரும்புச்சத்து மிகுந்தது, மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும், பெருங்காயம் வாயுத்தொல்லை நீக்கும்.
வேப்பம்பூ சாதம்
தேவையானவை: அரிசி 200 கிராம், வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு, மோர் மிளகாய் 4, கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் இரண்டு டீஸ்பூன், நெய் சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு… வேப்பம்பூவையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு சாதம் வைத்து, அதில் வறுத்த வேப்பம்பூ கலவை, உப்பு சேர்த்து, நெய் விட்டு நன்கு கலந்து சூடாக சாப்பிட்டால்.. நாவுக்கு ருசியாக இருக்கும்.
குறிப்பு: வேப்பம்பூ… பித்தம், தலைசுற்றல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ சீஸனில் அதை சேகரித்து, காயவைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் 4, இஞ்சி விழுது அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் 100 மில்லி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி, கொட்டையை எடுத்துவிட்டு மிக்ஸியில் அரைக்கவும். நெல்லிக்காய் விழுது, இஞ்சி விழுதை தயிரில் கலந்து, உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: நெல்லிக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ரத்தசோகை உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தலாம். நெல்லிக்காயில் துவையல், அல்வா, போளி, ஜாம் என்று பலவிதமாக தயாரித்து ஒவ்வொரு ருசியிலும் பயன்பெறலாம்.
முடக்கத்தான் கீரை தோசை
தேவையானவை: புழுங்கல் அரிசி 200 கிராம், வெந்தயம், உளுத்தம்பருப்பு தலா 2 டீஸ்பூன், முடக்கத்தான் கீரை இரண்டு கைப்பிடி அளவு (கீரை விற்பவரிடம் கேட்டு வாங்கவும்), எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஒன்றாக ஊற வைத்து… ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முடக்கத்தான் கீரையையும் சேர்ந்து நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவை தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து, லேசாக எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இட்லி மிளகாய்ப் பொடியை தோசையின் மேலே தூவி சாப்பிடலாம். முடக்கத்தான் கீரை… கால்வலி, மூட்டுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
ஓம லேகியம்
தேவையானவை: ஓமம் 25 கிராம், மிளகு 10 கிராம், சுக்கு ஒரு சிறிய துண்டு, அரிசி திப்பிலி 10, கண்டதிப்பிலி 10 கிராம், சித்தரத்தை, விரலி மஞ்சள் தலா ஒரு சிறிய துண்டு, வெல்லம் 150 கிராம், நெய் 100 மில்லி.
செய்முறை: ஓமம், மிளகு, சுக்கு, கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி, சித்தரத்தை, மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு நன்கு பொடிக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சி, செய்துவைத்த பொடியை சேர்த்துக் கிளறி, நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, ஆறிய உடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: வயிறு சரியில்லாத சமயத்தில் இந்த லேகியத்தில் இருந்து சிறிதளவு எடுத்து, உருண்டையாக உருட்டி அப்படியே சாப்பிடலாம்.
வாழைத்தண்டு கோஸ் மோர்க்கூட்டு
தேவையானவை: முட்டைகோஸ் கால் கிலோ, மிளகு 10, வாழைத்தண்டு இரண்டு துண்டுகள், காய்ந்த மிளகாய் ஒன்று, தயிர் ஒரு கப், கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு. தேங்காய்த் துருவல் 4 டேபிள்டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,
செய்முறை: கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாழைத்தண்டின் மேல்பட்டைகளை உரித்து, தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கவும். இதை கோஸுடன் சேர்த்து, உப்பு போட்டு வேகவிடவும். மிளகு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து, வேகவைத்த கோஸ் வாழைத்தண்டுடன் சேர்க்கவும். இதனை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி, தயிர் விட்டு கலக்கவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்க்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
குறிப்பு: வாழைத்தண்டு பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். நார்ச்சத்து உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சூடான சாதத்தில் இந்த மோர்க்கூட்டு சேர்த்து, பொரித்த அப்பளம் தொட்டு சாப்பிட்டால்.. சுவை அள்ளும்.
பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு 6, இஞ்சி ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் ஒன்று, கடுகு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை சிறிதளவு, எலுமிச்சம்பழம் ஒரு மூடி, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணைக்கிழங்கை வேகவைத்து தோல் உரிக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வெந்த கருணைக்கிழங்கை சிறிதளவு நீர் விட்டு நன்கு மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறி, மசித்த கருணைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, நறுக்கிய கொத்த மல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: நன்கு தோல் உலர்ந்த பழைய கிழங்கை வாங்கினால் அரிப்பு இருக்காது. பிடிகருணைக்கிழங்கு மூலநோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
புதினா கொள்ளு பொடி
தேவையானவை: புதினா, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு ஒரு டீஸ்பூன், கொள்ளு 25 கிராம், தனியா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: புதினா, கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுக்க வும். மிளகு, கொள்ளு, தனியாவை ஒன்றாக வறுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம். புதினா வாசனையுடன் கொள்ளு, சேர்ந்து, வித்தியாசமான ருசி யுடன் இருக்கும்.
மல்டி மாவு மூலிகை சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, சோள மாவு தலா ஒரு கப், ஓமம் 2 டீஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், வெற்றிலை ஒன்று, இஞ்சி ஒரு சிறிய துண்டு, பூண்டு 2 பல், துளசி இலை 10, புதினா, கொத்தமல்லித் தழை சிறிதளவு, நெய் 25 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, சோள மாவு மூன்றையும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். ஓமம், பூண்டு, வெற்றிலை, இஞ்சி, துளசி இலை, புதினா, கொத்தமல்லித் தழையை மிக்ஸியில் போட்டு நன்கு மசியும்படி விழுதாக அரைத்து மாவில் சேர்த்து… எள், சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக திரட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சப்பாத்திகளைப் போட்டு, லேசாக நெய் தடவி வாட்டி எடுக்கவும்.
தூதுவேளை துவையல்
தேவையானவை: தூதுவளை இலை ஒரு கைப்பிடி அளவு, புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மீதமான தீயில் வைத்து, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். தூதுவளை இலையையும் வாணலியில் போட்டு வதக்கிக்கொள்ளவும். பின்பு இவற்றை ஒன்று சேர்த்து… உப்பு, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: தூதுவளை… இருமல், சளித்தொல்லைக்கு சிறந்த நிவாரணம் தரும். இந்த துவையலை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
சுண்டைக்காய் துவையல்
தேவையானவை: காய்ந்த சுண்டைக்காய் வற்றல் 25 கிராம், காய்ந்த மிளகாய் 2, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக்காய் வற்றலை பொன்னிறமாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். சிறிது மசிந்ததும், உப்பு, புளி, வறுத்த சுண்டைக்காய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: இந்தத் துவையல் வயிற்றுக்கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். சூடான சாதத்தில், துவையலை சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இதற்கு, சுட்ட அப்பளம் சூப்பர் காம்பினேஷன்!
கலவைக்காய் கூட்டு
தேவையானவை: கோஸ் துருவல் ஒரு கைப்பிடி அளவு, கத்திரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு, குடமிளகாய், தக்காளி தலா ஒன்று, பச்சை மிளகாய் 2, பாசிப்பருப்பு ஒரு சிறிய கிண்ணம், சீரகம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குழைய வேகவிடவும். சீரகம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவலை விழுதாக அரைக்கவும். எல்லா காய்களையும் பொடியாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: வீட்டில் சமைத்த பிறகு, காய்கள் கொஞ்சமாக மிகுந்து இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு கலவைக்காய் கூட்டு செய்யலாம்.
அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை ஒரு சிறிய கட்டு, பாசிப்பருப்பு ஒரு சிறிய கிண்ணம், பெரிய வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, கடுகு அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அகத்திக்கீரையையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, குறைவாக தண்ணீர் விட்டு வேகவிடவும். சிறிது வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு வெந்த உடன் பிழிந்து தண்ணீரை வடிகட்ட வும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த அகத்திக்கீரை பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய்த் துருவல் தூவிக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: அகத்திக்கீரை, குடல்புண்ணுக்கு சிறந்த மருந்து.
தானிய உருண்டை மோர்க்குழம்பு
தேவையானவை: கொள்ளு, சோயா, துவரம்பருப்பு, சோளம் தலா 25 கிராம், மிளகு 10, இஞ்சி ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் ஒன்று, தயிர் 300 மில்லி, தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன், வெந்தயம், தனியா, சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, சோயா, துவரம்பருப்பு, சோளம் ஆகியவற்றை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்பைப் போட்டு உருட்டும் பதத்தில் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, வெந்தயம், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து அரைத்து, தயிரில் கலக்கவும். வேகவைத்த பருப்பு உருண்டைகளை அதில் போட்டு… எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, லேசாக சூடாக்கி இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சூடான சாதத்தில் குழம்பு விட்டு உருண்டையை தொட்டுக்கொண்டும்… உருண்டைகளை சாதத்தில் போட்டு பிசைந்து, குழம்பு தொட்டுக்கொண்டும் விருப்பப்படி சாப்பிடலாம்.
கத்திரிக்காய் – முருங்கைக்காய் பொரியல்
தேவையானவை: பெரிய வெங்காயம் இரண்டு, பிஞ்சுக் கத்திரிக்காய் கால் கிலோ, முருங்கைக்காய், தக்காளி தலா 2, தனியா, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கெட்டியான தேங்காய்ப்பால் அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்து… நறுக்கிய தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வறுத்துப் பொடித்த பொடி, தேவையான உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். கெட்டியானதும் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
அங்காயப் பொடி
தேவையானவை: கடுகு 25 கிராம், வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு, சுக்கு ஒரு சிறிய துண்டு, சுண்டைக்காய் வற்றல் 15, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு, மிளகு ஒரு டீஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு,
செய்முறை: கடுகு, வேப்பம்பூ, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். பெருங்காயத்தை எண்ணெ யில் பொரிக்கவும். ஆறிய உடன் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.
குறிப்பு: பிரசவித்த பெண்களுக்கு, இந்தப் பொடியை சூடான சாதத் தில் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் காக்கும்.
சுண்டைக்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: சுண்டைக் காய் வற்றல் 20, புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் 2, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி 2 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இதற்கு தயிர் பச்சடி, சுட்ட அப்பளம் சிறந்த காம்பி னேஷன். சுண்டைக்காய் வற்றல் குழம்பு பித்தத்தைத் தணிக்கும்.
மாங்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: உப்பு சேர்த்து காயவைத்த மாங்காய் வற்றல் 6 துண்டுகள், புளி நெல்லிக்காய் அளவு, மிளகு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 25 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: மாங்காய் வற்றலை ஊறவைக்கவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை போட்டு வறுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மாங்காய் வற்றலையும் அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, புளிக் கரைசல் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பு, வயிற்றுப் புரட்டலில் இருந்து நிவாரணம் அளிக்கும்