ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

வாழைப்பூ கோலா உருண்டை...



என்னென்ன தேவை? 

வாழைப்பூ - ஒன்று,

சின்ன வெங்காயம் - 100 கிராம்,

பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப,

இஞ்சி, பூண்டுவிழுது - 2 டீஸ்பூன்,

பொட்டு கடலை மாவு - 250 கிராம்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

வெள்ளை எள் அல்லது கசகசா - 100 கிராம்,

முந்திரி - 10,

புளித்தமோர் - ஒரு கப்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு 

நீக்கவேண்டும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த 

 மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த 

வாழைப்பூவையும் போடவேண்டும். பிறகு 

வடிகட்டி உப்பு  சேர்த்து குக்கரில் போட்டு 

வேகவைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் 

கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்ஸியில் 

அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு 

பாத்திரத்தில் மிகவும் பொடியாக  நறுக்கிய 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு 

விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்  கிய 

கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக 

நறுக்கிய முந்திரிப்பருப்பு, அரைத்த வாழைப்பூ 

 சேர்த்துப் பிசைய வேண்டும். இதில் 

பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் 

கொஞ்சமாக 

சேர்க்கவும்.


உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை 

மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் 

 இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ 

உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட் ஜில் வைக்க 

வேண்டும்.  தேவைபடும்போது எண்ணெயை 

நன்கு காய வைத்து அதில் இந்த 

உருண்டைகளை போட்டு  சிறிது நேரம் 

கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் 

இறக்கவும். இது, காய்கறி பிரியாணி மற்  றும் 

சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக 

இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக